Friday, April 18, 2014

1000 அர்த்தங்கள்.


இவர்களை பார்த்தவுடன், சட்டென சிரிப்பவரா ? நீங்கள் அப்படி என்றால் ? உங்களுக்கு விரிவான, உயர்வான மனதை இறைவன் கொடுக்கவில்லை என்றே பொருள், மாறாக சிந்தித்து பார்த்தீர்களானால் ! நல்ல எண்ணமுள்ளவர், நன்றி மறக்காதவர், ஆம் சில விசயங்களை வைத்தே சிலரை கணிக்க முடியும் என்பது உண்மைதான், சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் கைபேசியின் ஒலியோசையை வைத்துக்கூட ஒருவரது குணதியசங்களை கணிக்க முடியும், என கசாநாயகி கசாநாயகனிடம், சொல்வார். ஆம் இதுவும் உண்மையே உணர்வு என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் இறைவன் கொடுத்துள்ளான், அப்படியிருக்க இவர்களும் மனிதர்கள்தானே இவர்களுக்கும் ஒரு வாழ்க்கை வேண்டுமே...

இந்த பெண்மணியை நமது சகோதரியாக நினைத்துப் பாருங்கள் ! உங்களுக்கு சிரிப்பு வராது, மனதுக்குள் இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றும், இதைவிட இந்த சகோதரரை நீங்களாக நினைத்துப் பாருங்கள் ? ? ? என்ன கசக்கிறதா ? ஆம், உண்மையின் சுவை கசப்பானதே... இறைவன் நம்மை எத்தனை உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறான் என்பது புலப்படுமே ! தனக்கு தனக்குனா சரீரம் சாரீரம் பாடும் இதுவும் உண்மைதான், 

ஊனமுற்றோர்களை உதாசீனப்படுத்தாதீர்கள், இரண்டு கை, கால்களும் உள்ள உழைக்காத வாழைப்பழ சோம்பேறிகளை விட ஊனமுற்ற உழைப்பாளி உயர்ந்தவரே...

இரண்டு கைகளும் இல்லாத காரணத்தால், கால்களை கொண்டு எழுதுவோர் உண்டு, தனக்கென தானே ஸ்டேரிங் உருவாக்கி கார் ஓட்டும் 23 வயது வாலிபன் உண்டு, வாயால் தூரிகை பிடித்து ஓவியம் தீட்டுவோர் உண்டு, ஒரு கால் இல்லாத மண்வெட்டி தொழிலாளி உண்டு, பிறவியிலேயே கண் இல்லாத எலக்ராணிக் மெக்கானிக்கர் உண்டு, ஒருகால் இல்லாமல் தினம் Abu Dhabi to Sharjah Taxi Trip  அடிக்கும் எனது பாக்கிஸ்தானி நண்பரும் உண்டு, (Automatic Carக்கு மற்றொரு கால் தேவையில்லை என்பது வேறு விசயம்) இன்னும் சொல்லப் போனால் இதயமே இல்லாமல் எத்தனையோ பேர் வாழும் இந்த பூமியில் இறைவன் உனக்கு நல்ல(?இதயத்தை கொடுத்திருக்கின்றாரே... 

இவர்களை எல்லாம் உன் மனக்கண்முன் நிறுத்திப்பார் நீ பாக்கியசாலியென சந்தோஷம் கொள்வாய். இனியும் நீ இவர்களை தாழ்வு மனப்பான்மையுடன் காண்பாய் எனில் உனது ஒரு கையையோ, அல்லது ஒரு காலையோ, மடக்கி கட்டிக்கொண்டு ஒரேயொரு நாள் வாழ்ந்துபார் 1000 அர்த்தங்கள் உனக்கு விளங்கும்.

வால்மீகி தேவகோட்டை 

8 comments:

  1. ல்லை நண்பரே,

    சத்தியமாய் சிரிப்பு வரவில்லை, மாறாய் மனம் நெகிழ்ந்தது ! அவர்களுக்கு ஒரு வாழ்க்கை அமைந்ததை எண்ணி குளிர்ந்தது !

    நேரமிருப்பின் எனது " கறுப்புதான் எனக்கு பிடித்த கலரு " பதிவை படித்து பாருங்கள். அழகியலை மட்டுமே முன்நிறுத்தி பார்க்கும் நம் சமூக காரணத்தை அறிய முயன்றிருக்கிறேன்.

    http://saamaaniyan.blogspot.fr/2013/12/blog-post.html


    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  2. அருமையான பதிவு நண்பரே ....

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. ராஜா அவர்களே...

      Delete
  3. எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நண்பரே !

    தங்கள் பெயரை ஒரு சுழற்சி முறை பதிவில் இணைத்துள்ளேன்... விபரங்களுக்கு என் வலைப்பூ பக்கம் வாருங்களேன் ! நன்றி

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  5. உடல் ஊனமுற்றவர்களை கேலியாக சித்தரித்து மகிழும் திரைப்படங்களால் பலருக்கும் மனிதாபிமானம் என்ற உணர்வே மரத்துப் போய்விட்டது. இத்தகைய சூழலில் இதுபோன்றதொரு சமூகப் பொறுப்புடன் கூடிய பதிவு மனத்தை நெகிழ்த்துகிறது. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete